கொல்கத்தாவில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!

கொல்கத்தாவில் 4 வயது சிறுமி தன்னுடைய ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

Last Updated : Dec 3, 2017, 01:58 PM IST
கொல்கத்தாவில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! title=

கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் 4 வயது பள்ளி மாணவி தன்னுடைய இரண்டு ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கம் ஜி.டி. பிர்லா பள்ளியில், அபிஷேக் ராய் மற்றும் முகம்மது மாப்சூடின் ஆகிய இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும் குழந்தையிடம் சாக்லேட் கொடுத்து கழிப்பறையில் வைத்து பலாத்காரம் செய்துள்ளதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் அவர்களை கைது செய்தனர். அதன் பின், குற்றங்கள் குழந்தைகள் நல பாதுகாப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றத்திற்கு முன் அமர்விற்கு வந்தது.

எனவே, கோபம் கொண்ட பெற்றோர்கள் சனிக்கிழமை காலையில் பள்ளி வளாகத்திற்கு வெளியே  போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தற்போதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

 

 

Trending News