அந்த இடத்தை அப்படியே வெட்டிய காதலன்! பிளாக்மெயில் செய்த காதலனுக்கு தண்டனை - தன்பாலின காதலில் கொடூரம்

சொகுசு விடுதியில் அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய காதலனின் ஆண் உறுப்பை, அவரின் காதலனே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், தன்பாலின காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 11, 2022, 01:06 PM IST
  • தன்பாலின காதலர், தனது காதலரையே அந்தரங்கமாக வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார்.
  • இருவரும் கடந்த ஓராண்டாக பழகி வந்துள்ளனர்.
  • இதுதொடர்பாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
அந்த இடத்தை அப்படியே வெட்டிய காதலன்! பிளாக்மெயில் செய்த காதலனுக்கு தண்டனை - தன்பாலின காதலில் கொடூரம் title=

உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், 32 வயதான இளைஞர் ஒருவரும், 30 வயதான இளைஞரும் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பரேலி மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சில நாட்களுக்கு முன், பரேலி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இருவரும் தனியாக இருந்ததை, 30 வயதான இளைஞர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். 

மேலும், அந்த வீடியோவை வைத்து 32 வயதான இளைஞரை அவர் மிரட்டியுள்ளார். அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியது மட்டுமல்லாமல், பணம் தரவில்லை என்றால் சமூக வலைதளத்தில் அதை பதிவேற்றிவிடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.  இதனால், மன உளச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட இளைஞர், தனது காதலனிடம் பலமுறை பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க | உலக மக்களை உலுக்கிப்போட்ட 9/11 தாக்குதல்கள்: இன்று 21 ஆவது நினைவு தினம்

அந்த வகையில், இருவரும் நேற்று (செப். 10) ஹோட்டல் ஒன்றில் சந்தித்தபோது, அந்த வீடியோவை அழிக்கும்படி பாதிக்கப்பட்ட இளைஞர், மற்றொருவரிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த வீடியோவை அழிக்க அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அங்கு கைக்கலப்பு ஆகியுள்ளது. அப்போது, பாதிக்கப்பட்ட இளைஞர் அங்கிருந்த கூர்மையான பொருளை வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரின் ஆண் உறுப்பை வெட்டியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேற்சிகிச்சைக்காக ஆண் உறுப்பு வெட்டப்பட்ட நபர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றொரு நபர் நலமாக உள்ளதாகவும் அரசு மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, போலீசார் தரப்பில் கூறுகையில்,"இந்த விவகாரம் தொடர்பாக எவ்வித எழுத்துப்பூர்வமான புகாரும் இதுவரை வரவில்லை. தற்போது, சம்பவம் நடத்த ஹோட்டலின் சிசிடிவி கேமாரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னர், விசாரணை நடத்தப்பட்ட விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றனர்.

மேலும் படிக்க | ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலின் 50 வங்கி கணக்குகள் முடக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News