வாங்கிய கடனை திரும்ப தராததால் இருவரை கொலை செய்த கொடுமை....

டெல்லியில் கடன் வாங்கிய பணத்தை 2 பேர் திரும்ப தராததால் அவர்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

Last Updated : Jan 30, 2019, 10:46 AM IST
வாங்கிய கடனை திரும்ப தராததால் இருவரை கொலை செய்த கொடுமை.... title=

டெல்லியில் கடன் வாங்கிய பணத்தை 2 பேர் திரும்ப தராததால் அவர்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

டெல்லி: ரோகிணி மாவட்டத்தில் பெகுபுர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காவல்துறையினர் இது குறித்து கூறுகையில், 27 ஆம் தேதி ரோகிணி கிராமத்தில் ஒரு வாகனத்திற்குள் பாதிக்கப்பட்டவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய பிறகு, குற்றவாளிகளான மங்கேஷ் (24) மற்றும் தர்மேந்தர் (20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய ஆயுதம் ஆகியவற்றையும் காவைதுரையினர் கைப்பற்றியுள்ளனர். 

மேலும், முதல் கட்ட விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவர் அவர்களிடம் இருந்து சுமார் 12 லட்சம் கடன் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டனர், ஆனால் அதை திரும்பப் கொடுக்கவில்லை என்று அதிகாரி கூறினார். 

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பாதிக்கப்பட்டோருடன் தொலைதூர பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை சுட்டுக்கொன்றதாக அவர் தெரிவித்தார். 

 

Trending News