கோலாப்பூர் மினி பஸ் விபத்தில் 13 பேர் பலி!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 13 பேர் பலி

Last Updated : Jan 27, 2018, 08:22 AM IST
கோலாப்பூர் மினி பஸ் விபத்தில் 13 பேர் பலி!! title=

மகாராஷ்டிரா: மேற்கு கோலாப்பூரில் சிற்றுந்து ஒன்று 17 பேருடன் கணபதிபுலே நகரில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் புனே நகரின் பேல்வாடி பகுதியை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் சிவாஜி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த அந்த சிற்றுந்து பஞ்சகங்கா ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நிலையில் விபத்தின் பலி எண்ணிக்கை 13-ஆகா அதிகரித்துள்ளது.  காயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

Trending News