உங்கள் நரை முடியை கருமையாக்க இதை செய்யுங்கள்

அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் மாற்றத்தால், சிறு வயதிலிருந்தே முடி நரைத்தல் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 1, 2022, 01:53 PM IST
  • வெள்ளை முடியால் தொந்தரவு
  • கடுகு எண்ணெயை மஸாஜ் செய்யவும்
  • எண்ணெயில் சிறப்பு தூள் கலக்கவும்
உங்கள் நரை முடியை கருமையாக்க இதை செய்யுங்கள் title=

புதுடெல்லி: வெள்ளை முடிக்கான வீட்டு வைத்தியம்: அதிகரித்து வரும் மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை நம் முகத்திலிருந்து முடி வரை காணலாம். இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல், நரைத்தல் போன்ற பிரச்சனைகள் சிறு வயதிலேயே அதிகமாகி விட்டது. பல சமயங்களில் தலைமுடியை சரியாக பராமரிக்காததால் வெள்ளையாக மாற ஆரம்பித்து விடுவதும், சில சமயங்களில் சில நோய்களால் முடி முன்கூட்டியே வெள்ளையாக மாறுவதும் நடக்கும்.

முடியை இயற்கை முறையில் கருமையாக்கலாம்
வெள்ளை முடியை கருமையாக்க, சாயம் அல்லது வண்ணம் பூசுவதற்குப் பதிலாக, மற்ற இயற்கை முறைகளைப் பயன்படுத்தலாம். கடுகு எண்ணெய் வெள்ளை முடியை கருப்பாக்குவதற்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது. கடுகு எண்ணெயில் மருதாணி பொடியை கலந்து முடிக்கு மசாஜ் செய்வதன் மூலம் வெள்ளை முடிக்கு வலுவூட்டுவது மட்டுமின்றி, வேரில் இருந்து கருப்பாகவும் மாறும்.

மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

முடியை கருமையாக்க சிறப்பு எண்ணெய் தயாரிக்கவும்
ஆயுர்வேதத்தின் படி, கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. இதன் மூலம், வழுக்கை நீங்குவதுடன், கூந்தலை வலுவாகவும், கருப்பாகவும் மாற்றலாம். இந்த சிறப்பு எண்ணெயை மிகவும் பயனுள்ளதாக மாற்ற, 1 கப் கடுகு எண்ணெய் மற்றும் 3 டீஸ்பூன் மருதாணி தூள் அல்லது இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது எண்ணெய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. கேஸ் மீது இரும்பு வாணலியை வைத்து அதில் கடுகு எண்ணெயை ஊற்றவும்.
2. எண்ணெயைச் சூடாக்கிய பிறகு, மருதாணி தூளை சேர்க்கவும்.
3. கொதி வரும் வரை எண்ணெயை கிளறவும், தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
4. எண்ணெய் முற்றிலும் கருப்பாக மாறியதும் கேஸ் ஐ அணைக்கவும்.
5. எண்ணெய் பாத்திரத்தை 1 மணி நேரம் மூடி வைக்கவும். எண்ணெய் குளிர்ந்த பிறகு, அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் நிரப்பு வாரம் ஒரு முறை முடியில் தேய்த்து வரவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News