பணத்தை அள்ளிக் கொடுக்கும் அஞ்சலறைப் பொருள்! இப்படி பயன்படுத்தினால் கோடீஸ்வரி தான்

 Effective Vastu Tips: இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வாஸ்துவிலும் பரிகாரமாக பயன்படுத்தப்படுகிறது. லவங்கத்தை இப்படி பயன்படுத்தினால் பணக்காரராகலாம் ...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2022, 08:40 PM IST
  • வீட்டில் பணம் சேர வாஸ்து டிப்ஸ்
  • அஞ்சலறை மசாலாவின் அபூர்வ குணம்
  • செல்வத்தை சேர்த்து வைக்கும் லவங்கம்
பணத்தை அள்ளிக் கொடுக்கும் அஞ்சலறைப் பொருள்! இப்படி பயன்படுத்தினால் கோடீஸ்வரி தான் title=

புதுடெல்லி: பொதுவாக உணவின் சுவையை அதிகரிக்க இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஜோதிடத்தின் படி, நீங்கள் விரும்பினால், உங்கள் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு இலவங்கப்பட்டையையும் பயன்படுத்தலாம். இதற்கு சில தந்திரங்களை பயன்படுத்தினால் போதும். ஆனால் இலவங்கப்பட்டையின் தந்திரம் மாதத்தின் முதல் தேதியில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போதுதான் அது பலனளிக்கும். இலவங்கப்பட்டையின் தூள் எடுத்து அதன் மீது தூபக் குச்சிகளை ஏழு முறை கடிகார திசைக்கு எதிர் திசையில் சுழற்றி செல்வம் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு காகிதத்தில் சிறிது பட்டைத் தூளை எடுத்து மடித்து, உங்கள் பணப்பையில், வீட்டில் பாதுகாப்பாக பணம் வைத்திருக்கும் இடத்தில் வைக்கவும். மீதமுள்ள பொடியை வீட்டின் பூஜையறையில் வைக்கவும். அடுத்த நாள், பூஜையறையில் இருக்கும் லவங்கப் பொடியை வேறு ஒரு காகிதத்தில் சுற்று, அதை பணப்பெட்டியில் வைக்கவும். இப்படி தினசரி தொடர்ந்து செய்யவும். சில நாட்களில் பணம் உங்கள் வீட்டில் தங்கத் தொடங்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

இலவங்கப்பட்டை பொடியை கையில் எடுத்துக்கொண்டு, உங்கள் வீடு, வணிகம் அல்லது வேலை செய்யும் இடத்தின் பிரதான வாசலில் உட்புறமாக பார்த்தபடி நிற்கவும். இதற்குப் பிறகு, இலவங்கப்பட்டை பொடியை உள்நோக்கி ஊதி ஊதவும். இந்த பரிகாரத்தை செய்யும் போது, ​​உங்கள் வீடு அல்லது வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட இறைவனை பிரார்த்தியுங்கள். இந்த பரிகாரத்தை செய்த பிறகு, உங்கள் கைகளில் இருக்கும் இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கழுவ வேண்டாம் மாறாக அதை நீங்களே துடைத்துக் கொள்ளுங்கள். 

பொதுவாக, செல்வம் பெற லட்சுமி தேவியை வழிபடுவார்கள், வெள்ளிக்கிழமை செல்வத்தை சேர்க்க மிகவும் சிறப்பான நாள். வெள்ளிக்கிழமையன்று, லட்சுமி தேவியை வணங்கி, இனிப்புகளை நிவேதனம் செய்தால், வீட்டில் வளம் பெருகும். லவங்கப்பட்டை பரிகாரத்தை மாதத்தின் முதல் தேதியன்று வரும் வெள்ளிக்கிழமையில் செய்தால் அது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News