ஒரு கிளாஸ் பெருங்காயத் தண்ணீர்..இந்த நன்மைகள் உங்களை தேடி வரும்

Hing Water Benefits: வீட்டு மசாலாப் பொருட்களில் பெருங்காயம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் பெருங்காயத்தில் ஏராளமாக காணப்படுகின்றன, இது உங்களை பல நோய்களில் இருந்து விலக்கி வைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 13, 2023, 08:11 AM IST
  • பெருங்காய தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
  • வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
ஒரு கிளாஸ் பெருங்காயத் தண்ணீர்..இந்த நன்மைகள் உங்களை தேடி வரும் title=

பெருங்காயத்திற்கு என்று சமையலில் தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது பெருங்காயம். பெருங்காயம் கார நெடியுடன் கூடிய கார்ப்பு சுவை கொண்டதாகும். சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். மருத்துவ குணங்கள் நிறைந்த பெருங்காய நீர், உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடியது. இதில் கார்போஹைட்ரேட் நார்ச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுவதால், பல நோய்களில் இருந்து உங்களை காக்கும். பெருங்காய நீரின் சில அற்புத நன்மைகள் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்...

பெருங்காய தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்-
செரிமான அமைப்பை மேம்படுத்தவும்- அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்து, செரிமான அமைப்பை ஒழுங்குபடுத்தப் பெருங்காயத்தூள் உதவுகிறது. மேலும் இது வயிற்றின் பி.ஹெச் நிலையை சரி செய்ய உதவுகிறது. இதன் பயன்பாடு வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. வயிற்றை லேசாக வைத்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதற்கு பெருங்காய நீரை கரைத்து குடிக்கவும்.

மேலும் படிக்க | தொப்பையை கரைக்கும் உத்தான பாதாசனம்... செய்வது எப்படி!

1. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது- பெருங்காய தண்ணீர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இது இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவைக் கொண்டுள்ளது, இது இரத்த சர்க்கரையை குறைக்கும். சர்க்கரை நோயாளிகள் பெருங்காய தண்ணீரை உட்கொண்டால், அது நன்மை பயக்கும்.

2. உடல் எடை குறைக்க உதவும்- பெருங்காய தண்ணீர் உடல் எடையைக் குறைப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது. பெருங்காயம் உடல் பருமனைத் தடுக்கும் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் விளைவைக் கொண்டுள்ளது. அதன் உதவியுடன், உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்கலாம்.

3. மாதவிடாய் வலியில் நிவாரணம்- மாதவிடாய் வலி அதிகமாக இருந்தால், பெருங்காய தண்ணீர் குடித்தால், பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும். டிஸ்மெனோரியாவில் அதாவது மாதவிடாயின் போது ஏற்படும் வலியில் பெருங்காயம் பயனுள்ளதாக இருக்கும்.

பெருங்காய தண்ணீர் செய்வது எப்படி
பெருங்காய தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும், அதில் அரை டீஸ்பூன் பெருங்காயத்தை கலக்கவும். இப்போது இந்த தண்ணீரை மெதுவாக குடிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் செக்ஸ் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்... இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News