தொடர்ந்து இரண்டாவது நாளாக 900 இறப்புகளை சந்தித்த ஸ்பெயின்...

ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 900-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்திருப்பதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் விகிதம் தொடர்ந்து குறைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Last Updated : Apr 3, 2020, 04:48 PM IST
தொடர்ந்து இரண்டாவது நாளாக 900 இறப்புகளை சந்தித்த ஸ்பெயின்... title=

ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 900-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்திருப்பதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் விகிதம் தொடர்ந்து குறைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொடிய கொரோனா வைரஸால் இத்தாலிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கை ஸ்பெயினில் உள்ளது. ஸ்பெயினில் இந்த கொடிய வைரஸ் இதுவரை 10,935 உயிர்களைக் கொன்றது (நேற்று மட்டும் 932 பேர்) மற்றும் 117,710 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை பெற்றுள்ளது.

ஆனால் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் புதிய வழக்குகள் மற்றும் இறப்புகளின் விகிதத்தில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய போக்கை உறுதிப்படுத்துகின்றன என தெரிவிக்கின்றன.

சமீபத்திய எண்ணிக்கை தொற்றுநோய்களின் வீதத்தை 6.8% ஆகக் காட்டுகிறது, இது வியாழக்கிழமை 7.9% ஆகவும், கடந்த வாரத்தின் நடுப்பகுதியில் 20% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேப்போல் இறப்புகளின் தினசரி உயர்வு வெள்ளிக்கிழமை 9.3% ஆக குறைந்தது. முன்னதாக வியாழக்கிழமை 10.5%-ஆகவும், மார்ச் 25 அன்று 27%-ஆகவும் இருந்தது. இந்த புள்ளிகளின் படி பார்த்தால் தற்போதைய புள்ளிகள் ஆரோக்கியமான கீழ்நோக்கு பாதையில் செல்கிறது என கூறலாம்.


ஸ்பெயினில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள்
117,710
 
 
 

 

 
செயலில் உள்ள வழக்குகள்
76,262
+3,702

 

 
மீட்கப்பட்ட வழக்குகள்
30,513
+3,770

 

 
இறப்புகள்
10,935
+932

 


சீன நாட்டின் ஹுகானில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா தொற்று நோயால் உலகளவில் இதுவரை 10 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேவேளையில் இறப்புகளின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் இந்த எண்ணிக்கை 2600 பாதிப்பு மற்றும் 74 இறப்புகளை பதிவு செய்துள்ளது. கொடிய கொரோனா தொற்று நோயை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போத நாடு முழுவதும் 21 நாள் முழு அடைப்பினை மத்திய அரசு அமுல் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News