ஆரோக்கியத்தை வேரறுக்கும் கொடூர அரக்கன் பிளாஸ்டிக்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு

பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தினால், கவனமாக இருங்கள், உடலுக்கு பல தீராத நோய்கள் வரலாம்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 23, 2022, 02:47 PM IST
  • பிளாஸ்டிக் பொருட்களின் அதிக பயன்பாடு ஏற்படுத்தும் தீரா நோய்கள்
  • நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் பிளாஸ்டிக்
  • இரசாயன எதிர்வினைகள் மூலம் உடலுறுப்புகளை சேதப்படுத்தும் பிளாஸ்டிக்
ஆரோக்கியத்தை வேரறுக்கும் கொடூர அரக்கன் பிளாஸ்டிக்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு title=

கடந்த பல தசாப்தங்களாக, பூமியில் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதற்குப் பின்னால் உள்ள பெரிய காரணம் பிளாஸ்டிக் பொருட்களின் அதிகபட்ச பயன்பாடு என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

பிளாஸ்டிக் (Plastic) நெகிழ்ச்சியடையும் தன்மையைக் கொண்டது என்பதால் நெகிழி எனப்படுகிறது. நெகிழி ஏற்படுத்தும் நோய்களின் தாக்கம் நெகிழாதவை என்பது அதன் அத்தனை நன்மைகளையும் பின் தள்ளிவிடுகிறது.  

பிளாஸ்டிக் பொருட்கள் பார்ப்பதற்கு அழகாகவும், எடுத்துச் செல்லவும் எளிதாகவும் இருக்கும். ஆனால் இவை நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். 

ஒரு புதிய ஆய்வின்படி, ஒருமுறை பயன்படுத்தும் காபி கோப்பை உள்ளிட்ட அன்றாட பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது டிரில்லியன் கணக்கான நுண்ணிய துகள்களை வெளியிடுகின்றன. 

இதுபோன்ற சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் நுழைந்து, இரசாயன எதிர்வினைகள் மூலம் பல உறுப்புகளை சேதப்படுத்துவது மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க |நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்..!!

பிளாஸ்டிக் பயன்பாடு பற்றிய கவலைகளை அதிகரிக்கும் ஆய்வு
இந்த நுண்ணிய பிளாஸ்டிக்குகள் விளைவிக்கும் தீமைகளை புரிந்துகொள்வதற்காக, பரவலாகப் பயன்படுத்தப்படும் சில நுகர்வோர் தயாரிப்புகளை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜி (The National Institute of Standards and Technology (NIST)) ஆய்வு செய்துள்ளது. 

பிளாஸ்டிக் பொருட்கள் சூடான நீரில் வெளிப்படும் போது, ​​அவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு டிரில்லியன் கணக்கான நானோ துகள்களை வெளியிடுவதாக அவர்கள் கண்டறிந்தனர். என்ஐஎஸ்டி ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை சுற்றுச்சூழல் அறிவியல் & தொழில்நுட்பம் (Environmental Science & Technology) என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிட்டனர்.

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான இந்த அறிக்கையில், லிட்டருக்கு சுமார் டிரில்லியன் என்ற அளவில், அதாவது எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், பிளாஸ்டிக் பொருட்கள்  பல வகையானதாக இருந்தாலும், அவை அனைத்தும் பாலிமர்களால் உருவானவை. 

மேலும் படிக்க | ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! மனித ரத்தத்தில் கலக்கும் பிளாஸ்டிக்!

ஒன்றாக இணைக்கப்பட்ட பெரிய மூலக்கூறுகளால் ஆனவை. பெருங்கடல்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும், பிளாஸ்டிக் நுண்துகள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த நுந்துகள்களை, மைக்ரோ மற்றும் நானோபிளாஸ்டிக்ஸ் என இரண்டு குழுக்களாக ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

பொதுவாக 5 மில்லிமீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டவை மைக்ரோபிளாஸ்டிக்ஸ், வெறும் கண்ணால் அவற்றை பார்க்க முடியும். நானோபிளாஸ்டிக்ஸ் ஒரு மில்லியனில் ஒரு மீட்டரை விட சிறியவை (ஒரு மைக்ரோமீட்டர்). இவற்றில் பெரும்பாலானவற்றை நுண்ணோக்கி மூலம் கூட பார்க்க முடியாது.

health

சமீபத்திய ஆய்வுகளின்படி, சில பாலிப்ரோப்பிலீன் (polypropylene), குழந்தைகளுக்காக நாம் பயன்படுத்தும் பேபி பாட்டில்கள் மற்றும் டிப் டீ நைலான் பிளாஸ்டிக் தேநீர் பைகள் (Dip Tea Bags) என அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள பிளாஸ்டிக்குகளு ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துபவை ஆகும்.

பிளாஸ்டிக் பக்க விளைவு (Plastic side effect)
இப்படி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் உடலுக்குப் பல பாதிப்புகள் ஏற்படும். உதாரணமாக, முதலில் அவை உடலில் ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன, பின்னர் நரம்பு தொடர்பான பிரச்சனைகளையும் அதிகரிக்கின்றன.

குழந்தையின்மை, மலட்டுத்தன்மை என எதிர்கால உலகத்திற்கும் பல அச்சுறுத்தல்களை பிளாஸ்டிக் துகள்கள் அதைவிட ஆபத்தான விஷயம் என்னவென்றால், அவை நம் நுரையீரலில் நமக்குத் தெரியாத சில பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் படிக்க | மனித நுரையீரலில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

புற்றுநோய் உட்பட சில பெரிய நோய்களுக்கு காரணமாகும் பிளாஸ்டிக் நுண்துகள்கள், சில பெரிய நோய்களுக்கு காரணமாகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு தீராத ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.

எனவே, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். முடிந்த அளவு உங்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை குறைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உணவு மற்றும் பானங்களை பிளாஸ்டிக் பைகளில் வைக்க வேண்டாம், ஏனெனில் இது உங்கள் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.

வசதி என்பதற்காக பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தொடர்ந்தால், எதிர்கால சந்ததிகளுக்கு மட்டுமல்ல, நாம் வாழும் காலத்தில் நாமே மிகப் பெரிய சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

மேலும் படிக்க | ஜவ்வரிசியால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்: கண்டிப்பா அடிக்கடி சாப்பிடுங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News