Digital Loan பற்றி ஆர்பிஐ வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்

Reserve Bank of India: டிஜிட்டல் கடன்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான தேதியை இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 5, 2022, 09:58 AM IST
  • டிஜிட்டல் கடன்களை விநியோகிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கடன் வரம்பை தானாக உயர்த்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி தன்னிச்சையான வட்டிக் கட்டணம் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து முறையற்ற வசூல் போன்ற சம்பவங்களைத் தடுக்க இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Digital Loan பற்றி ஆர்பிஐ வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் title=

ரிசர்வ் வங்கி: டிஜிட்டல் கடன்களை விநியோகிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு போதுமான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை ஏற்படுத்த நவம்பர் 30 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது. இதைச் செய்வதன் மூலம், தற்போதுள்ள டிஜிட்டல் கடன்கள் புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படும். தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களுக்கு புதிய விதிகள் பொருந்தும். கடன் வழங்கும் சேவை வழங்குநர்கள் அல்லது டிஜிட்டல் லெண்டிங் செயலிகளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் செய்யப்படும் ஏற்பாடுகள் அவற்றின் பொறுப்பைக் குறைக்காது என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அவர்கள் எப்போதும் புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.

வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி, பணிக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகு கடந்த மாதம் டிஜிட்டல் கடன்கள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதன்படி அனைத்து கடன்களின் விநியோகமும் (டிஸ்ட்ரிபியூஷன்) மற்றும் திருப்பிச் செலுத்துதல் (ரீபேமண்ட்) ஆகியவை வங்கிக்கும் கடன் வாங்குபவருக்கும் இடையே இருக்கும். இங்கு மூன்றாம் தரப்பினர் ஈடுபட மாட்டார்கள். 

மேலும் படிக்க | முன்னணி நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. உடனே விண்ணப்பியுங்கள்!

இதனுடன், வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கடன் வரம்பை தானாக உயர்த்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தன்னிச்சையான வட்டிக் கட்டணம் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து முறையற்ற வசூல் போன்ற சம்பவங்களைத் தடுக்க இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள் ஏன் வெளியிடப்பட்டன?

ஆர்பிஐ இந்த வழிகாட்டுதலில், எல்பிஎஸ்-க்கு ஏதேனும் கட்டணங்கள் செலுத்தப்பட்டால், அவை ஆர்இ மூலம் செலுத்தப்படும் என்றும் கடன் வாங்கியவர் மூலம் அல்ல என்றும் கூறியுள்ளது. குறிப்பாக மூன்றாம் தரப்பு சங்கங்கள் தரவுகளை தவறாகப் பயன்படுத்துவது, தரவு தனியுரிமை மீறல், நியாயமற்ற வணிக நடைமுறைகள், வட்டி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் தவறான சேகரிப்பைத் தடுப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. 

இதன் காரணமாக, இப்போது டிஜிட்டல் கடன்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான தேதியை இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் இத்தகைய சுரண்டல்களிலிருந்து பாதுகாக்க முடியும்.

மேலும் படிக்க | ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்யணுமா? இனி உங்கள் மொபைல் மூலமே செய்யலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News