Gas Connection: புதிய கேஸ் இணைப்பு வாங்கப்போறீங்களா? அப்போ உங்களுக்கான அப்டேட் தான் இது

நாடு முழுவதும் 1.50 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான மக்களுக்கு எரிவாயு இணைப்பு விரைவில்  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 14, 2023, 08:52 AM IST
  • சிஎன்ஜி கேஸ் விநியோகம் விரைவில் தொடக்கம்
  • வீடுகளுக்கு நேரடியாக கொடுக்க திட்டம்
  • இது மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதி
Gas Connection: புதிய கேஸ் இணைப்பு வாங்கப்போறீங்களா? அப்போ உங்களுக்கான அப்டேட் தான் இது title=

சிஎன்ஜி இணைப்பு: அனைவருக்கும் வீட்டில் சிலிண்டர் தேவை. அன்றாட வீட்டு சமையல் உள்ளிட்ட உபயோகங்களுக்கு மக்கள் சிலிண்டர்களையே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், பல இடங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிலிண்டர் தொல்லையில் இருந்து மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். இதற்கிடையில், இப்போது CNG மற்றும் PNG எரிவாயு இணைப்புகள் தொடர்பாக ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. இதன் மூலம், மக்கள் பெருமளவு நிவாரணம் பெற உள்ளனர்.

எரிவாயு இணைப்பு

உண்மையில், அரசு நடத்தும் இந்தியன் ஆயில் CNG (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் PNG (குழாய் இயற்கை எரிவாயு) இணைப்புகளை குடியிருப்பு அலகுகளுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், GAN இணைப்பு தொடர்பாக மக்கள் நிம்மதி பெற உள்ளனர். விரைவில் மக்களுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் 1.50 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது, விரைவில் மக்கள் இந்த இணைப்புகளை பெற உள்ளனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission மாஸ் செய்தி: விரைவில் பம்பர் சம்பள ஏற்றம்... இதுதான் காரணம்!!

CNG சிலிண்டர் சோதனை அலகு

இதுதவிர, ஏர்வியோ டெக்னாலஜிஸ் மூலம் கோவை அருகே அமைக்கப்படவுள்ள சிஎன்ஜி சிலிண்டர் சோதனை பிரிவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் (பைப்லைன்ஸ்) எஸ்.நரவனே திறந்து வைத்தார். இது அதன் வகையின் முதல் அலகு என்று கூறப்படுகிறது. இனிவரும் காலங்களில் இதன் மூலம் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் பாதுகாப்பானது

இந்நிகழ்ச்சியில், “சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி மற்ற மாற்று எரிபொருட்களை விட சுமார் 30 சதவீதம் சிக்கனமானவை மற்றும் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. மக்களின் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது என நரவனே தெரிவித்தார். 

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! கோதுமை - அரிசி 1ம் தேதி முதல் நிறுத்தம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News