அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு; எவ்வளவு சம்பளம் கிடைக்கும்

மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் ஊழியர்களின் கிராக்கிப்படி அளவீட்டை மத்திய அரசு உயர்த்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2021, 09:46 AM IST
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு; எவ்வளவு சம்பளம் கிடைக்கும் title=

Central Government DA News: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி வெளியானது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை மோடி அரசு தற்போது நீக்கி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி அளவீட்டை (Dearness Allowance or அகவிலைப்படி) அளவீட்டை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

7 வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) கீழ், இப்போது அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 28 சதவீத வீதத்தில் டிஏ (Dearness Allowance) மற்றும் டிஆர் (Dearness Relief) வழங்கப்படும். செப்டம்பர் மாதத்தில் இது ஊழியர்களுக்கு செலுத்தப்படும். செப்டம்பர் மாத சம்பளத்தில் டிஏ 28 சதவீத அளவில் செலுத்தப்படும். மேலும் ஜூலை மற்றும் ஆக்ஸ்ட் என இரண்டு மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இப்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் கிரேடுக்கு ஏற்ப சம்பள உயர்வு குறித்த ஒரு கணக்கீட்டை செய்ய முடியும்.

ALSO READ | மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு: இதுதான் ஊதிய கணக்கீடு

கிராக்கிப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் ஒரு முக்கியமான பகுதி, இந்தக் கிராக்கிப்படி உயர்த்தப்படும் போது கணிசமான தொகை சம்பளத்திலும் உயர்வும்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாகக் கிராக்கிப்படி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கிராக்கிப்படி உயர்வு ஒய்வுதியம் பெறுபவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கிராக்கிப்படி அளவை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கிராக்கிப்படியில் சுமார் 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் சம்பள கூடுதலாகக் கிடைக்கும்.

7வது சம்பள கமிஷன் படி ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் முதல் 56,900 ரூபாய் வரையில் இருக்கும். இதன் படி 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கியவர், இதுநாள் வரையில் கிராக்கிப்படியாக 3,060 ரூபாய் பெற்று இருப்பார், தற்போது அறிவித்துள்ள 28% கிராக்கிப்படி மூலம் 5,040 ரூபாய் பெறுவார்கள். இந்த 11 சதவீத கிராக்கிப்படி உயர்வின் மூலம் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 1,980 ரூபாய் கிடைக்கும், இதுவே வருடத்திற்கு 23,760 ரூபாய்க் கூடுதலாகக் கிடைக்கும்.

அதிகப்படியாக 56,900 ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்குவோருக்கு 9,673 ரூபாய் கிராக்கிப்படியில் இருந்து 15,932 ரூபாய் பெறுவார். அதாவது கூடுதலாக மாதம் 6,259 ரூபாயும், வருடத்திற்கு 75,108 ரூபாயும் பெறுவார்கள். 

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News