ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. உடனே கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்

ஜி20 இல் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது தவிர, இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிற மரியாதைக்குரிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 3, 2023, 09:37 AM IST
  • இரயில்வே தந்த முக்கிய அப்டேட்.
  • ஜி-20 வர்ச்சுவல் ஹெல்ப் டெஸ்க்.
  • 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து.
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. உடனே கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள் title=

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு: நம் நாட்டில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதனால், ரயில் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, மக்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில், தற்போது 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் ஒன்றை அறிவித்துள்ளது. உண்மையில், டெல்லியில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டை கருதில் கொண்டு ரயில்வே இந்த மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. புது டெல்லியில் ஜி20 மாநாட்டிற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இதனிடையே, தற்போது 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரயில்வே தந்த முக்கிய அப்டேட்: 
இந்நிலையில் வடக்கு ரயில்வேயின் கூற்றுப்படி, மொத்தம் 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 36 ரயில் சேவைகள் செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஷார்ட் டர்மினெட் அல்லது ஷார்ட் ஓரிஜினெட் செய்யப்படும். இது தவிர, 15 ரயில்களின் முனையம் மாற்றப்பட்டு, ஆறு ரயில்களின் வழித்தடங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வெளியிடப்பட்ட ஆலோசனையை கருத்தில் கொண்டு, இந்த ரயில்கள் செப்டம்பர் 8 மற்றும் 11 க்கு இடையில் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தற்காலிகமாக மற்ற வழித்தடங்கள் அல்லது நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அளித்த சூப்பர் செய்தி: இந்த மாதம் முதல் விலைவாசி குறையும்.. காரணம் இதுதான்!!

ரயில்களின் விவரம்: 
முன்னதாக டெல்லி காவல்துறை சனிக்கிழமையன்று தேசிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் முழு ஆடை ஒத்திகைகளை நடத்தியது மற்றும் வழி பரிந்துரைகளுக்கு 'ஜி-20 வர்ச்சுவல் ஹெல்ப் டெஸ்க்' நிகழ்நேர போக்குவரத்து புதுப்பிப்புகளை சரிபார்க்க மக்களுக்கு அறிவுறுத்தியது. இந்த வழிப் பரிந்துரைகள் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அல்லது பேருந்து முனையங்களுக்குச் செல்வதற்கும் ஆகும்.

எக்ஸ்ட்ரா ஸ்டோபேஜ்:
இது தவிர, பயணிகளின் சிரமத்தை குறைக்க, ரயில்வே நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 70 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்துமிடங்கள் ரயில்வேயால் வழங்கப்பட்டுள்ளன. ஜம்மு தாவி-புது டெல்லி ராஜ்தானி, தேஜஸ் ராஜ்தானி ஹஸ்ரத் நிஜாமுதீன், வாரணாசி-புது டெல்லி தேஜஸ் ராஜ்தானி போன்ற ரயில்கள் இதில் அடங்கும்.

ரயில் நேரம்:
இது தவிர, 36 ரயில்களின் வழித்தடங்கள், அவற்றின் தொடக்க மற்றும் முடிவு நிலையங்களும் மாற்றப்பட்டுள்ளன, மேலும் உச்சிமாநாட்டின் போது டெல்லியில் உள்ள கிஷன்கஞ்சில் மூன்று ரயில்கள் நிற்காது. மேலும், இந்த தேதிகளில் பயணம் செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் ரயில் நேரங்கள் மற்றும் வழித்தடங்களை சரிபார்த்து அசௌகரியத்தை தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் முக்கிய அப்டேட்: மீண்டும் வருகிறதா OPS? காத்திருக்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News