Credit card பயன்படுத்துபவரா நீங்கள்? இதைக் கட்டாயம் படியுங்கள்

ஐசிசிஐசிஐ வங்கியில் இருந்து கிரெடிட் கார்டு பேமெண்டை லேட் ஆக செலுத்தினால், முன்பை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 12:48 PM IST
Credit card பயன்படுத்துபவரா நீங்கள்? இதைக் கட்டாயம் படியுங்கள் title=

புதுடெல்லி: கடந்த சில ஆண்டுகளாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நீங்களும் கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், இந்த செய்தி உங்களுக்கானது. பல நேரங்களில் சில காரணங்களால் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இது உங்கள் பட்ஜெட்டையும் பாதிக்கக்கூடும்.

முன்பை விட விட தாமத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
ஆனால் தற்போது ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank Credit Card) கிரெடிட் கார்டை சரியான நேரத்தில் பில் செலுத்தாததற்கான தாமதக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, ஐசிஐசிஐ வங்கி சார்பில், வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் உயர்த்தப்பட்ட கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

ALSO READ | இந்த வங்கி 20 லட்சம் ரூபாய்க்கான பலனை உங்களுக்கு இலவசமாக அளிக்கிறது! 

மற்ற வங்கிகளும் கட்டணத்தை அதிகரிக்கலாம்
உயர்த்தப்பட்ட கட்டணங்கள் பிப்ரவரி 10, 2022 முதல் அமலுக்கு வரும். தாமதமாக பணம் செலுத்துவதுடன், தற்போது கிரெடிட் கார்டில் (Credit card) இருந்து பணத்தை எடுப்பதும் முன்பை விட விலை உயர்ந்ததாக இருக்கும். இது முக்கிய அறிவிப்பு விரைவில் வங்கிகளிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை புதிய கட்டணங்களாக இருக்கும்
உங்கள் நிலுவைத் தொகை ரூ.100 முதல் ரூ.500 வரை இருந்தால், தாமதமாக செலுத்தினால் ரூ.100 வசூலிக்கப்படும். அதேபோல், ரூ.501 முதல் ரூ.5000 வரையிலான நிலுவைத் தொகைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மறுபுறம், 5000 முதல் 10000 வரை பாக்கி இருந்தால், அபராதம் ரூ 750. 10001 முதல் 25 ஆயிரம் வரையிலான மீதித் தொகைக்கு ரூ.900 அபராதம் விதிக்கப்படும். மறுபுறம், 25001 முதல் 50 ஆயிரம் வரையிலான நிலுவைத் தொகைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் அதற்கு மேல் 1200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ஏடிஎம்மில் இருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்க, மொத்தத் தொகையில் 2.5 சதவீதம் அல்லது ரூ.500, எது அதிகமோ அதைச் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், காசோலை திரும்பவும், ஆட்டோ டெபிட் திரும்பவும், குறைந்தபட்சம் ரூ.500 செலுத்த வேண்டும். 25 ஆயிரத்துக்கு மேல் நிலுவைத் தொகை இருந்தால் இரண்டு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இது தவிர, மேலே உள்ள அனைத்து கட்டணங்களுக்கும் ரூ.50 + ஜிஎஸ்டி தனித்தனியாக செலுத்தப்படும்.

ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஏமாற்றம், அரசு தரப்பில் வந்த மிகப்பெரிய அப்டேட்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News