மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 புத்தாண்டு பரிசுகள்: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிக்கும்

7th Pay Commission: மத்திய அரசு தேர்தலுக்குள் இரு பெரிய அறிவிப்புகளை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். இந்த அறிவிப்புகளின் கீழ், அகவிலைப்படி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 7, 2023, 06:45 AM IST
  • AICPI குறியீட்டு புள்ளிவிவரங்கள் எப்படி உள்ளன?
  • எச்ஆர்ஏ 30 சதவீதத்தை தாண்டும்.
  • மக்களவை தேர்தலுக்கு முன் அறிவிப்பு வெளியாகலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 புத்தாண்டு பரிசுகள்: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிக்கும் title=

7வது ஊதியக்கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மத்திய தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய புத்தாண்டு பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு தேர்தலுக்குள் இரு பெரிய அறிவிப்புகளை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன். இந்த அறிவிப்புகளின் கீழ், அகவிலைப்படி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கலாம். தற்போது, ​​மத்திய ஊழியர்கள் ஜூலை முதல் 46 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். ஜனவரியில் டிஏ 4 முதல் 5 சதவவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 முதல் 51 சதவிகிதமாக அதிகரிக்கும். 

AICPI குறியீட்டு புள்ளிவிவரங்கள் எப்படி உள்ளன? 

ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) சமீபத்திய புள்ளிவிவரங்கள் 138.4 மதிப்பெண்களைக் காட்டுகின்றன. இதில் 0.9 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தரவு இது. நவம்பர் மாத இறுதியில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தரவு வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறை அகவிலைபப்டியில் மாற்றம் ஏற்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைபப்டி திருத்தப்படுகின்றது. முந்தைய ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களின் ஏஐசிபிஐ தரவின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் (DA), ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance)

அகவிலைப்படி 50% ஐ எட்டியவுடன், வீட்டு வாடகை கொடுப்பனவும், அதாவது எஹ்ஆர்ஏ -வும் (HRA) 3 சதவீதம் அதிகரிக்கலாம். இது நடந்தால், 2024ல் ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும். இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் அரசாங்கத்திடம் இருந்து பெறப்படவில்லை. இதுவரை ஜூலை முதல் அக்டோபர் வரையிலான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகள் வெளியாகி, அதில் குறியீட்டு எண் 138.4 புள்ளிகளையும், டிஏ மதிப்பெண் 49 சதவீதத்தையும் எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், டிஏ மீண்டும் குறைந்தபட்சம் 4% அதிகரிக்கும் என்பது உறுதியாகக் கருதப்படுகிறது. இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் 2023க்கான புள்ளிவிவரங்கள் வரவில்லை. அவையும் வந்த பிறகுதான் 2024 -இல் அகவிலைப்படி (DA) எவ்வளவு அதிகரிக்கும் என்பது முடிவு செய்யப்படும்.

எச்ஆர்ஏ 30 சதவீதத்தை தாண்டும்

வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3% ஆக இருக்கும். தற்போதைய அதிகபட்ச விகிதம் 27 சதவீதமாகும். திருத்தத்திற்குப் பிறகு அதிகபட்ச விகிதம் 30% ஆக இருக்கும். ஆனால், அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போதுதான் இது நடக்கும். அகவிலைபப்டி 50 சதவீதத்தை எட்டியவுடன், எச்ஆர்ஏ நகர வகைகளுக்கு ஏற்ப 30%, 20% மற்றும் 10% ஆக மாறும் என 7வது ஊதியக்குழு (7th Pay Commission) குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு வகைகள் உள்ளன. தற்போதுள்ள நிலவரப்படி எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்களுக்கு 27 சதவீத ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. டிஏ 50% ஆக உயர்ந்தால், இது 30% ஆகிவிடும். அதே நேரத்தில், ஒய் பிரிவு ஊழியர்களுக்கு இது 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.

மேலும் படிக்க | SBI அம்ரித கலசம் FD திட்டம்...டிசம்பர் 31ம் தேதி வரை தான் சான்ஸ்!

மக்களவை தேர்தலுக்கு முன் அறிவிப்பு வெளியாகலாம்

மக்களவைத் தேர்தலுக்கு முன், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இது அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், மக்களவைத் தேர்தல் தேதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களுக்கு இடையில் அறிவிக்கப்படலாம். அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வரும். அதன் பிறகு மத்திய அரசால் டிஏ -வை (DA) உயர்த்த முடியாது. இதற்கு முன், பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மத்திய ஊழியர்களை கவரும் வகையில், டிஏ குறித்த முடிவை மோடி அரசு எடுக்கக்கூடும். இதன் மூலம் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

மேலும் படிக்க | வங்கி FD மீதான வட்டி விகிதங்கள் 10% ஆகுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News