7th Pay Commission: ஜூலை 1 முதல் 39% டிஏ, பம்பர் ஊதிய ஏற்றம், முழு கணக்கீடு இதோ

7th Pay Commission: அரசாங்கம் ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் எவ்வளவு ஏற்றம் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2022, 10:14 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி.
  • விரைவில் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும்.
  • முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
7th Pay Commission: ஜூலை 1 முதல் 39% டிஏ, பம்பர் ஊதிய ஏற்றம், முழு கணக்கீடு இதோ title=

7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: நீண்ட நாட்களாக காத்திருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அரசாங்கம் ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் எவ்வளவு ஏற்றம் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி 
அகவிலைப்படியின் அதிகரிப்பு ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்தது. மார்ச் 2022 இல் ஏஐசிபிஐ குறியீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அரசாங்கம் அகவிலைப்படியை 3-க்கு பதிலாக 5 சதவீதம் அதிகரிக்கலாம் என்பது உறுதியானது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 27 ஆயிரத்திற்கும் மேல் உயரக்கூடும்.

ஏஐசிபிஐ இன்டெக்ஸ் விவரங்கள் 
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீடு சரிவைக் கண்டது. ஆனால் அதன் பிறகு ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் இந்த தரவு இருந்தது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் டிஏ அரியர் குறித்த முக்கிய அப்டேட் 

இப்போது ஏப்ரல் மாதத்தின் புள்ளிவிவரங்களும் வெளிவந்துள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக உள்ளது. இதில் 1.35 சதவீதம் அதிகரிப்பாகும். அதாவது இப்போது மே மற்றும் ஜூன் மாத தரவு 127ஐ தாண்டினால், அகவிலைப்படி 5 சதவீதம் வரை அதிகரிக்கும். 

சம்பளம் எவ்வளவு உயரும்?
அரசு அகவிலைப்படியை 5% உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்களின் டிஏ 34% லிருந்து 39% ஆக உயரும். இப்போது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (39%) - ரூ.22,191/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,845/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,845X12 = ரூ.34,140

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (39%) - ரூ.7,020/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு 7020-6120 = ரூ.900/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 900 X12 = ரூ 10,800

மேலும் படிக்க | 7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, டிஏ 5% அதிகரிக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News