7th Pay Commission:ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 பம்பர் செய்திகள்

7th Pay Commission: ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காக மூன்று பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படக்கூடும். மத்திய அரசு ஊழியர்கள் இந்த மாதத்தில் டிரிபிள் போனான்ஸாவை பெறக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2022, 02:26 PM IST
  • மத்திய அரசு ஊழியர்கள் இந்த மாதத்தில் டிரிபிள் போனான்ஸாவை பெறக்கூடும்.
  • ஜூலையில் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்.
  • 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்த அறிக்கைகள் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் உள்ளன.
7th Pay Commission:ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 பம்பர் செய்திகள் title=

7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காக மூன்று பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படக்கூடும். ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் இந்த மாதத்தில் டிரிபிள் போனான்ஸாவை பெறக்கூடும். இதில் முதலாவது அகவிலைப்படி உயர்வு (டிஏ ஹைக்), இரண்டாவது 18 மாத டிஏ நிலுவைத் தொகை பற்றிய அப்டேட், மூன்றாவது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி.

ஜூலையில் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்

சமீபத்திய ஊடக அறிக்கைகளின் படி, ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்படலாம். இதன் பொருள் அகவிலைப்படி 40 சதவீதத்தை எட்டக்கூடும். பல ஊடக அறிக்கைகளின்படி, ஜூலை 31 அன்று அரசாங்கம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கூடும். 

எனினும், இவை தொடக்க நிலை ஊகங்கள் மட்டுமே, மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகளுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். சமீபத்திய அமைச்சக அறிக்கைகளின்படி, மே மாதத்திற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் 129 ஆக உள்ளது. இது அகவிலைப்படி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும், அதாவது 6 சதவீதமாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துவதாக பல ஊடக இணையதளங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், எச்பிஏ விகிதங்களை குறைத்தது அரசு 

18 மாதங்கள் நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கிகள்

நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்த அறிக்கைகள் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் உள்ளன. புதிய அறிக்கைகளின்படி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பான கலந்துரையாடல் விரைவில் நடக்கலாம். மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கணக்கில் ஒரே நேரத்தில் ரூ.1.5 லட்சம் நிலுவைத் தொகை பெறுவதற்கான நம்பிக்கையை இழக்க வேண்டாம் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைபப்டி நிலுவைத் தொகையானது ஊழியர்களின் ஊதியம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து இருக்கும்.

வருங்கால வைப்பு நிதி வட்டி பரிமாற்றம்

2021-22 நிதியாண்டில், உறுப்பினர்களின் கணக்குகளில் சேர்ந்துள்ள இபிஈப் தொகைக்கு 8.10% வருடாந்திர வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அறங்காவலர் குழு, இபிஎஃப் பரிந்துரைத்துள்ளது. வட்டி விகிதம் அரசாங்க வர்த்தமானியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இபிஎஃப்ஓ ​​விரைவில் அதன் சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி விகிதத்தை வரவு வைக்கத் தொடங்கும். இபிஎஃப்ஓ ஒவ்வொரு ஆண்டும் இபிஎஃப் வட்டி விகிதத்தை அறிவிக்கிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News