30 பேரை கொன்று தின்ற ரஷ்ய தம்பதியர் கைது!

Last Updated : Sep 27, 2017, 10:15 AM IST
30 பேரை கொன்று தின்ற ரஷ்ய தம்பதியர் கைது! title=

ரஷ்யாவில் 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று தின்று வந்த கணவன் - மனைவியை ரஷ்ய நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி பக்சேவ் மற்றும் அவரது மனைவி நடாலியா 18 ஆண்டுகளாக நரமாமிசம் சாப்பிடுகிறார்கள். இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசுவதை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதன் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் மனித சதை, தோல் உட்பட பல உறுப்புகளை போலீசார் கண்டுள்ளனர். கொன்றவர்களின் உடல் உறுப்புகளுடன் இருவரும் செல்ஃபியும் எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து, ரஷ்யா போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Trending News