நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்... விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பதை ஆய்வு தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகள்  பல்வேறு வகையான தகவல்களை அளித்துள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 13, 2022, 04:11 PM IST
  • லவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகளின் உதவியுடன் புதிய வழிகளில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை.
  • செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை தேடும் பணி.
நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்... விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை! title=

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ள உயிர்கள் குறித்து புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஆய்வில், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகளின் உதவியுடன் புதிய வழிகளில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை அமைப்பது குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இர்வின் இந்த புதிய முறைகளை பரிசீலித்து வருகின்றனர். நுண்ணுயிரிகளின் உயிர்வேதியியல் செயல்முறையைப் ஆராய்வதன், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான வாழ்க்கையைக் கண்டறிய உதவும் என்று அது கூறுகிறது.

UCI இன் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறை மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி மற்றும் மேம்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இமேஜிங் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கையாக நிகழும் தாதுக்கள் மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட நானோசெராமிக்ஸ் இரண்டையும் நுண்ணுயிரிகள் எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.  இதில் ஒரு முக்கிய காரணி என்னவென்றால், சயனோபாக்டீரியா ஜிப்சம் பாறைகளுக்குள் காந்த இரும்பு ஆக்சைடு துகள்களைக் கரைக்கும் பயோஃபிலிம்களை உருவாக்குகிறது, பின்னர் காந்தத்தை ஆக்ஸிஜனேற்றப்பட்ட ஹெமாடைட்டாக மாற்றுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மேலும் படிக்க |  நிலவுக்கு மனித பயணத்தின் முதல் படி.. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட Artemis 1 ​​ராக்கெட்!

முன்னதாக, செவ்வாய் கிரகம் குறித்த அறிக்கையில், சிவப்பு கிரகத்தில் நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த கிரகத்தின் சுற்றுச்சூழலை வாழ்க்கை நட்புடன் மாற்ற இது உதவியாக இருந்திருக்கும். ஆனால் காலப்போக்கில் செவ்வாய் கிரகம் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும், இதன் காரணமாக இந்த நுண்ணுயிரிகள் கிரகத்தின் மேற்பரப்பில் ஆழமாகச் சென்று இங்கு வெப்பநிலை குறைந்து கொண்டே சென்றது என்கின்றனர்.

மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; மனிதர்களுக்கு எமனாகும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News