மிரட்டும் கொரோனா வைரஸ்: ஜப்பான் கப்பலில் 61 பேருக்கு கொரோனா

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : Feb 7, 2020, 10:00 AM IST
மிரட்டும் கொரோனா வைரஸ்: ஜப்பான் கப்பலில் 61 பேருக்கு கொரோனா title=

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே வருகிறது.

சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் சீனாவின் இறப்பு எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. 

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது. இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் வந்த அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது உள்ளே இருக்கும் நபர்களுக்கு வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே 20 பேருக்கு கொரோனா இருந்தது உறுதியான நிலையில் மேலும் 41 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Trending News