பிரதமர் மோடி வாகனம் மீது செல்போன் வீச்சு: கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. விளக்கம்

கர்நாடகாவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது, அவரது வாகனத்தின் மீது செல்போன் ஒன்று பறந்து வந்து விழுந்தது. இதனல் பிரதமர் மோடி மீது யாரோ செல்போன் வீசியதாகவும், பிரதமர் மோடி பங்கேற்கும் கர்நாடக நிகழ்ச்சியில் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரு பெண் பூக்கள் தூவியபோது தான் பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் தவறுதலாக விழுந்ததாகவும், இது பாதுகாப்பு குறைபாடு அல்ல என்றும் கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

Trending News