வட கிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் இன்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கோல்கட்டா, கவுகாத்தி, பாட்னா உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
இதை அடுத்து மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 பதிவாகி உள்ளது.
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கைலோமா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்
4 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 9.58 மணியளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் தெற்கு பசுபிக் கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
கடலுக்கடியில் 100 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தெருக்களிலும் சாலைகளிலும் தஞ்சம் அடைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.