Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம்

நீங்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உள்ளது. தற்போது இந்த இரு நிறுவனங்களும் தங்களது கட்டணத் திட்டங்களின் விலையை நாடு முழுவதும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 23, 2022, 10:19 AM IST
  • ரீசார்ஜ் திட்டங்களின் விலை மிக அதிகமாக அதிகரிக்கப் போகிறது.
  • ஏர்டெல் மற்றும் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலை.
  • 10 சதவீதம் விலை உயரும்.
Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம் title=

பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை நாட்டின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு வழங்குநர்கள் ஆவார்கள். அத்துடன் இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நாட்டில் 5ஜி நெட்வொர்க்கை கொண்டு வந்துள்ளன. இதனிடையே 5G நெட்வொர்க் வெளியான நிலையில் தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோவின் திட்டங்களில் விலை அதிகரிப்பு இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விலை உயர்வு நாடு முழுவதும் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

10 சதவீதம் வரை விலை உயர்த்தலாம்
Analysts ஜெஃப்ரிஸ் கருத்துப்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களால் விலைகள் 10% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்களின் மொபைல் கட்டணங்கள் மிக விரைவில் அதிகரிக்கக்கூடும். மேலும் FY23, FY24 மற்றும் FY25 இன் Q4 இல் ஏர்டெல் மற்றும் ஜியோவிடமிருந்து 10% விலை உயர்வு அறிவிக்கப்படும் என்றும் Analysts ஜெஃப்ரிஸ் கணித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Loan App: இதை செய்தால் கடன் செயலிகளின் தொல்லை இருக்காது 

ஏர்டெல் நிறுவனம் சோதனையை மேற்கொண்டுள்ளது
ஏர்டெல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சோதனை ஓட்டத்திற்காக ரூ 99 பேக்கை சில வட்டாரங்களில் இருந்து நீக்கியது. கட்டண உயர்வு மூலோபாயம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நோக்கங்களுக்கு ஏற்றதாக உள்ளது, இது கிராமப்புறங்களுக்கு விரிவடையும், மேலும் இது இலாபத்தை கூடுதலாக குறைக்கும். வளர்ந்து வரும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மற்றும் MNP (மொபைல் நம்பர் போர்டபிலிட்டி)க்கான கோரிக்கைகள் இந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிகரித்து வரும் போட்டியை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.

இதைக்கிடையில் TRAI இன் அக்டோபர் 2022 வாடிக்கையாளர் தரவுகளின்படி, Vodafone Idea வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனாக குறைந்துள்ளது. அதுவே Jio மற்றும் Airtel இணைந்து 2.2 மில்லியன் புதிய பயனர்களை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News