பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு; பொது இடத்தில் ரவுடிகள் தாக்கும் வைரல் வீடியோ

புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர்களை பொது இடத்தில் ரவுடிகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2021, 11:45 AM IST
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு; பொது இடத்தில் ரவுடிகள் தாக்கும் வைரல் வீடியோ title=

புதுச்சேரி, வினோபா நகரை சேர்ந்தவர் ஜான்பால், புடவை வியாபாரியான இவர் சாரம் பகுதியை சேர்ந்த குமார் என்பரிடம் கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரூபாய் 30 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதில் 20 ஆயிரம் ரூபாய் கடந்த சில  மாதங்களுக்கு முன்பே குமாரிடம் திருப்பி கொடுத்துவிட்ட நிலையில் நேற்றைய முன் தினம் குமாரின் நண்பர் உழவர்கரையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஜான்பாலுக்கு  செல்போனில் தொடர்பு கொண்டு குமார்க்கு கொடுக்க வேண்டிய  பணம் தொடர்பாக நேரில் பேச வேண்டும் என அழைத்துள்ளார்.

இதனை அடுத்து ஜான்பால் தனது அண்ணன் சதிஷ் குமாருடன் புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் உள்ள இந்திரா காந்தி சதுக்கம்  அருகே சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பிரகாஷ் அவரது நண்பரும் ரவுடியுமான தட்டாஞ்சாவடி முத்து மற்றும் இருவர் குமாருக்கு தரவேண்டிய 1.5 லட்ச ரூபாய் பணம் எங்க என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த சகோதரர்கள் குமார்க்கு தாங்கள் 10 ஆயிரம் ரூபாய் தான் பாக்கி தர வேண்டும் என கூறியுள்ளனர்.

ALSO READ | கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம்

இதில் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் ஜான்பால் மற்றும் அவரது சகோதரரை சரமாரியாக தாக்கி கீழே இருந்த செங்கலை தூக்கி அடித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த இருவரும் அருகே இருந்த பள்ளி கல்வி வளாகத்திற்கு சென்று ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டு, தாக்கப்பட்ட ஜான்பால் அளித்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்து உழவர்கரையை சேர்ந்த பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தலைமறைவாக உள்ள ரவுடி முத்து மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் ஜான் பால் மற்றும் அவரது சகோதரரை ரவுடிகள் கொலை வெறி தாக்குதல் நடத்துவதை  அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் (Social Media) வெளியிட்டுள்ளனர். புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும்  பொது இடத்தில் ரவுடிகள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியானது  பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

ALSO READ | பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News