ஆர்.கே. நகர் தேர்தலில் நடிகர் விஷால்! நாளை வேட்புமனு தாக்கல்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.

Last Updated : Dec 21, 2017, 02:05 PM IST
ஆர்.கே. நகர்  தேர்தலில் நடிகர் விஷால்! நாளை வேட்புமனு தாக்கல்? title=

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.

இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் போட்டியிடப் போவதாக கடந்த இரண்டு தினங்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது விஷால் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். கடைசி நாளில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். 

Trending News