வேலைக்காக தமிழகம் வந்த இரு வடநாட்டவர் பலி!

தமிழகத்தில் பணிபுரிவதற்காக ஈரோடு வந்த இரு கூலி தொழிலாளிகள் இன்று தீ-க்கு பலியாகினர்!

Last Updated : Jan 27, 2018, 02:30 PM IST
வேலைக்காக தமிழகம் வந்த இரு வடநாட்டவர் பலி! title=

ஈரோடு: தமிழகத்தில் பணிபுரிவதற்காக ஈரோடு வந்த இரு கூலி தொழிலாளிகள் இன்று தீ-க்கு பலியாகினர்!

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த வர்ஷினி மண்டல்(45), நோமித்தா(40) என்ற இருவர் தமிழகத்தில் கூலித்தொழில் செய்வதற்காக வந்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் திடிரென ஏற்பட்ட தீவிபத்தால் பலியாகினர்.

இந்த தீவிபத்தில் மற்றொரு தம்பதியினரும் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்கள், பனிக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் சிறு கூடாரம் அமைத்து கடந்த சில மாதங்களாக கூலி தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. விடியற்காலை சுமார் 1.30 மணியளவில் அவர்களின் கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீவிபத்திற்கான காரனம் குறித்து விசாரனை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Trending News