பள்ளியில் புகுந்து வெறிநாய் கடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்

மாணவர்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என மாணவன் உதயநிதியின் தந்தை தமிழரசன் மிகவும் வருத்தப்பட்டார் மற்றும் மற்ற மாணவர்களுக்கு இது போன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 13, 2021, 04:45 PM IST
  • பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
  • இது போன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • வகுப்பறைக்குள் புகுந்த வெறிநாய் சரமாரியாக கடித்ததில் மாணவர்கள் படுகாயம்.
பள்ளியில் புகுந்து வெறிநாய் கடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம் title=

ஆம்பூர்: பள்ளியில் புகுந்து வெறிநாய் கடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம். அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை கோரிக்கை.

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் மேல் காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மகன் உதயநிதி மற்றும் மாணவி நவியா இருவரும் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இருவரும் கடந்த சனிக்கிழமை தங்களது வகுப்பறையில் விளையாடி கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் புகுந்த வெறிநாய் ஒன்று இருவரையும் கை கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கடித்ததில் மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

ALSO READ |  ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர்!

உடனடியாக அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் இருந்த மருத்துவர்களிடம் அவர்களை அழைத்துச் சென்றபோது, முதலுதவி கூட அளிக்கப்படாமல் அனுப்பி விட்டதாகவும், அதன் பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கும் மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

rabies bite

மேலும் பள்ளியில் புகுந்து வெறிநாய் கடித்து படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மாணவர்களை, இதுவரை பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாணவர்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என மாணவன் உதயநிதியின் தந்தை தமிழரசன் மிகவும் வருத்தப்பட்டார். மேலும் அவர் கூறுகையில், மற்ற மாணவர்களுக்கு இது போன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ALSO READ |  புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவன! வைரலாகும் சிறுவனின் வீடியோ..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News