மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

Last Updated : Nov 3, 2017, 03:23 PM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி title=

சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தல 10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மணலகரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்ற விவசாயி, அவரது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றச் சென்ற போது மழை நீரில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து உயிரிழந்தார். உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தல 2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News