2,100 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக நியமனம்: தமிழக அரசு

கொரோனா பரவல் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், முன்கள மருத்துவ பணியாளர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.  இந்த நிலையில் 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளது நல்ல விஷயமாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 20, 2021, 11:36 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 35,579 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,34,804 ஐ எட்டியுள்ளது.
  • இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 397 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
2,100 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக நியமனம்: தமிழக அரசு title=

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதை பற்றிய விவரங்களை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிகப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் (Coronavirus) பரவல் மிக வேகமாக உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பலவித நன்மைகளை எடுத்து வருகிறது. அரசாங்கம் மூலம் மே 10 முதல் மே 24 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறுவிக்கப்பட்ட பின்னரும் தொற்று கட்டுக்கடங்காமல் போகவே, இன்னும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 

கொரோனா பரவல் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், முன்கள மருத்துவ பணியாளர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.  இந்த நிலையில் 2,100 சுகாதார பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளது நல்ல விஷயமாகும். இவர்கள் 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்கள் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும், தேவைக்கேற்ப இவர்கள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப் படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை அரசு (TN Government) சார்பில் வெளியிடப்பட்டது. 

இதற்கிடையில், இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 397 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,131 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இன்று 25,368 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 14,52,283 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,63,390 ஆக உள்ளது.

முன்னதாக, 18 முதல் 44 வரையிலான வயதினருக்கு தமிழ்நாட்டில் இலவசமாக COVID-19 தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை திருப்பூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை துவக்கி வைத்தார். 12,000 பணியாளர்களைக் கொண்ட நேதாஜி ஆடை பூங்காவில் இந்த தடுப்பூசி செயல்முறை தொடங்கியது, அனைத்து தகுதிவாய்ந்த ஊழியர்களும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதக்வர் ஸ்டாலின் (MK Stalin) அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

ALSO READ: தமிழகத்தில் 35,000-ஐத் தாண்டியது ஒரு நாள் தொற்று பாதிப்பு, 397 பேர் உயிரிழப்பு

ALSO READ: கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு: தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News