'இதுதான் மரபு...' ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு அப்பாவு விளக்கம் - முழு விவரம்

TN Assembly Speaker Appavu: தேசிய கீதம் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையிலேயே விளக்கம் அளித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 12, 2024, 11:49 AM IST
  • தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னரே சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறினார்.
  • தேசிய கீதம் தொடக்கத்தில் புறக்கணிக்கப்பட்டதாக ஆளுநர் குற்றச்சாட்டு
  • தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம்... இதுவே மரபு - சபாநாயகர் அப்பாவு
'இதுதான் மரபு...' ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு அப்பாவு விளக்கம் - முழு விவரம் title=

TN Assembly Speaker Appavu Explanation: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி, 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார், அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை 2-4 நிமிடத்திலேயே முடித்துக் கொண்டார். உரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன். ஆளுநர் வாழ்க தமிழ், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என உரையை முடித்துக் கொண்டார். 

கேரளாவை போல் தமிழ்நாட்டிலும்...

தேசிய கீதத்தை பேரவை தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் தேசிய கீதம் புறகணிப்பு? - உரையை இந்தாண்டும் வாசிக்காத ஆளுநர் ரவி

தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்த நிலையில், ஆளுநர் உரைக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் தமிழாக்கத்தை முழுமையாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தார். 

மேலும் கடந்தாண்டை போலவே இந்தாண்டும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். குறிப்பாக, சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை வாசித்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து புறப்பட்டார்.

கோட்சே, சாவர்க்கர்...

ஆளுநர் உரைக்கு பின்னர் பேசிய அப்பாவு,"தமிழ்நாடு அரசு ஆளுநர் உரைக்கு தயாரிப்புகள் எல்லாம் ஒப்புதல் பெற்று வாசிப்பதற்காக வந்தார். ஆளுநர் குறைவாக வாசித்தார்கள், அதை நான் குறைவாக சொல்லவில்லை. கொள்கை வேறுபாடு இருந்தாலும் மாண்போடு நடத்துவது தான் தமிழக அரசின் பண்பு

வெள்ளம் புயல் ஏற்பட்டபோது ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பி எம் கேர் ஃபண்டில் (PM Care Fund) உள்ளது. இந்திய மக்களால் கணக்கெழுத முடியாத கணக்கு கேட்க முடியாத ஃபண்டில் இரண்டாவதாக 50 ஆயிரம் கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும் என நானும் கேட்கலாமே...

நீங்கள் சவாகர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் தமிழ்நாடும் சரி, தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி எந்த வகையிலும் சளைத்ததில்லை" என்றார்.

சபாநாயகர் அப்பாவு விளக்கம்

குறிப்பாக, தேசிய கீதம் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அதில், "ஆளுநர் கடந்தாண்டே இதுகுறித்த கோரிக்கையை வைத்த நிலையில், அது மீது முடிவு எட்டப்பட்டது. சட்டப்பேரவையில் மரபுகள் பின்பற்றப்படுகின்றன. ஆளுநர் உரைக்கு முன் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படும். பின்னர் அவை அலுவல்கள் நிறைவுபெற்ற பின்னர் தேசிய கீதம் படிக்கப்படும். இதுவே மரபு" என தெரிவித்துள்ளார்.

ஏன் வெளியேறினார் ஆளுநர்?

சபாநாயகர் அப்பாவு தனது உரையில், சாவர்க்கர், கோட்சே ஆகியோரின் பெயரை சட்டப்பேரவையில் பயன்படுத்தியதால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | TN Assembly Session: முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News