இடி, மின்னல், சூறைகாற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!!

ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் சூறைகாற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்!!

Last Updated : May 27, 2019, 03:27 PM IST
இடி, மின்னல், சூறைகாற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!! title=

ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் சூறைகாற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தின் சில பகுதிகளில் வேப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் சூறைகாற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை உள்ள வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது,  இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும்  தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

அதேசமயம், திருவள்ளூர் முதல் தேனி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். பல்வேறு மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் பகுதிகளில் 5 செ.மீ மழையும், நடுவட்டம் பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்யாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News