அதிமுக ஆட்சி அமைய காரணம் சசிகலா: செல்லூர் ராஜூ

Last Updated : Oct 8, 2017, 01:27 PM IST
அதிமுக ஆட்சி அமைய காரணம் சசிகலா: செல்லூர் ராஜூ title=

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்க்க 5 நாட்கள் ‘பரோல்’ பெற்று சென்னை வந்து உள்ளார். 

இந்நிலையில் தற்போது சசிகலாவைப் பற்றி கருத்து ஒன்று கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலாதான், இன்றைய சூழலில் சசிகலா குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாமல் இருக்கிறேன். அதிமுக ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் எடுக்கும் நடவடிக்கைக்கு என்னுடைய கருத்து பாதகமாக இருக்க கூடாது. வேகமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த சுனாமி வேகத்தில் அரசு பணியாற்றி வருகிறது. திமுக டெங்குவை விட மோசமானது, ஐந்து முறை ஆட்சி செய்து திமுக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு பேசி உள்ளார்.

Trending News