விசாரணைக்காக வருபவர்களைத் துன்புறுத்தக் கூடாது...காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டு விதிமுறைகளையும் வகுத்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : May 4, 2022, 08:27 PM IST
  • விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது
  • காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
  • புதிய வழிகாட்டுதல்கள் வகுப்பு
விசாரணைக்காக வருபவர்களைத் துன்புறுத்தக் கூடாது...காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் title=

சென்னை சோழவரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், விசாரணை என்ற பெயரில் தன்னையோ, தனது குடும்பத்தினரையோ துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா,  குற்றங்கள் தொடர்பாக விசாரணையை நடத்த காவல் துறையினருக்கு அளவில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரத்தை குற்ற விசாரணை முறை சட்ட கட்டமைப்புக்குள் பயன்படுத்த வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, காவல் துறையினரின் விசாரணைகளின் பாதுகாவலராக மாஜிஸ்திரேட் இருந்தாலும், புலன் விசாரணையில் தலையிட அவருக்கு அதிகாரமில்லை என்பதால், விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்துவதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் படிக்க | உங்களுக்கு அங்கு என்ன வேலை : அரசியல்வாதிகளிடம் நீதிபதி கேள்வி.!

உயர் நீதிமன்றமும் வழக்கமாக புலன் விசாரணைகளில் தலையிடாது என்ற போதும், துன்புறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தால் கண்மூடி இருக்காது எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது, உச்ச நீதிமன்றம்  பிறப்பித்த வழிகாட்டு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், புகார் தொடர்பான விசாரணைக்கு ஒருவரை  அழைக்கும் போது, புகார் அளித்தவரின் பெயர், புகார் பெற்றதற்கான சான்று எண்,  எந்த தேதியில், எத்தனை மணிக்கு ஆஜராக வேண்டும் என எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு சம்மன் அனுப்ப வேண்டும் என வலியுறுத்திய  நீதிபதி, விசாரணை விவரங்களை காவல் நிலையத்தில் உள்ள பதிவேட்டில் குறிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு  ஆஜராவோரை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ‘குறைந்த தொகைக் கொடுத்து அவமானப்படுத்த வேண்டாம்.!’ தமிழக அரசுக்கு செ. உயர்நீதிமன்றம் சொன்ன ‘அட்வைஸ்’

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News