குப்பையைக் காணவா நுழைவுக் கட்டணம்? மாமல்லபுரம் குறித்து நீதிமன்றம் கண்டனம்

மாமல்லபுரத்திற்குள் நுழைய நுழைவுக் கட்டணம் வசூலிப்பது அங்குள்ள குப்பையைக் காணவா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 19, 2022, 04:48 PM IST
  • முறையாக பராமரிக்கப்படாத மகாபலிபுரம்
  • குப்பையைக் காணவா கட்டணம்?
  • சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
குப்பையைக் காணவா நுழைவுக் கட்டணம்? மாமல்லபுரம் குறித்து நீதிமன்றம் கண்டனம் title=

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவை பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பை பிரிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி குப்பை பிரிக்கும் பகுதி அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது என்றும், ஆனால் அதன்பின்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Mahabalipuram

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குப்பைக் கிடங்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி. நானே என்பவரை நீதிமன்ற ஆணையராக நியமித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க | மாமல்லபுரம் ஒரு உயிர் துடிப்பு மிக்க ஊர் - பிரதமர் மோடி...

அப்போது,  தமிழக அரசுத் தரப்பில், குப்பை கிடங்கு செயல்படவில்லை எனக் கூறி புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், விதிமீறல் தொடர்பாக மாமல்லபுரம் நகராட்சி செயல் அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Mahabalipuram

நீதிமன்ற ஆணையர் அளித்த அறிக்கையில் 2008-ம் ஆண்டு முதல் குப்பைக்கிடங்கு செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்காதது  துரதிருஷ்டவசமானது எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரியை தண்டிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்குக்குள் நுழையவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும் படிக்க | ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News