சென்னை இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை!

சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Last Updated : Dec 13, 2017, 09:41 AM IST
சென்னை இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை! title=

சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு, 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை கடந்த மாதம் கொள்ளையடிக்கப்பட்டன. 

இந்தக் கொள்ளையில் ராஜஸ்தானைச் சேர்ந்த சென்னாராம், கேலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக இருந்த நாதுராம், தினேஷ், சௌத்ரி ஆகியோரை தனிப்படை போலீஸார் தேடிவந்தனர்.

இவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றிருந்தனர். ஆபோது அங்கு திடிரென தமிழக போலீஸார் மீது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், கொளத்தூர் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.

Trending News