பள்ளிகளில் வாரம் ஒரு முறை யோகா பயிற்சி அளிக்க அரசு உத்தரவு!!

பள்ளிகளில் வாரம் ஒரு முறை யோகா பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 21, 2019, 10:01 AM IST
பள்ளிகளில் வாரம் ஒரு முறை யோகா பயிற்சி அளிக்க அரசு உத்தரவு!! title=

பள்ளிகளில் வாரம் ஒரு முறை யோகா பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சர்வதேச யோகா தினம் என்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பள்ளியில் மாணவர்களுடன் யோகா மேற்கொண்டார். 

முன்னதாக, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இன்று யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இன்று யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று யோகா தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒரு நாள் யோகா பயிற்சி கொடுக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 

முன்னதாக சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர். 

 

Trending News