கோயம்பேட்டில் திடீர் தீ-விபத்து; 2 ஆம்னி பேருந்து நாசம்!

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

Last Updated : Jul 27, 2019, 06:51 PM IST
கோயம்பேட்டில் திடீர் தீ-விபத்து; 2 ஆம்னி பேருந்து நாசம்! title=

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. 2 ஆம்னி பேருந்துகள் தீ பிடித்து எரிவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்த்தால் தீ மளமளவென பரவி 3-வது பஸ்சையும் நெருங்கியது. இந்நிலையில், தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீ மேலும் பரவாமல் பார்த்துக் கொண்டனர்.

இருப்பினும் இந்த விபத்தில் 2 ஆம்னி பஸ்களும் முழுவதும் எரிந்தது. இந்த தீவிபத்தால் எந்த அசம்பாவிதமும் சம்பமும் நடக்கவில்லை.  இன்று சனிக்கிழமை என்பதால் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து அங்கு பெரும் கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

Trending News