மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற மருமகன்

பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 23, 2023, 09:30 AM IST
  • கள்ளக்காதலனை ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செய்த மருமகன்.
  • உல்லாசமாக இருந்த மாமியார்.
  • இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற மருமகன் title=

இந்த காலகட்டத்தில் கள்ளக்காதல் அதிகளவு பெருகி கொண்டே வருகிறது. வயது வரம்பு இன்றி கள்ள காதலால் அதிகளவு வன்முறைகள் நடந்து கொண்டே இருப்பது தொடர்கதையான ஒன்றாகி வருகிறது. இது போன்ற முறையற்ற உறவு பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது.இது போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது. பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூச்சி அத்திப்பேடு கள்ளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 60. இவர் அலமாதி பால்பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் எடப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த எஸ்தர் 42 என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. 

மேலும் படிக்க | அதிமுக பொது செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு; EPS தரப்புக்கு அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

இந்நிலையில் எஸ்தரின் வீட்டில் எஸ்தரும் மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது முத்துகிருஷ்ணன் எஸ்தர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மணிகண்டன் என்னுடைய மாமியாரிடம் ஏன் பேசுகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இளநீர் வெட்டும் கத்தியை எடுத்து முத்துகிருஷ்ணனை தலையால் சரமரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்று விட்டார். இதில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகின்றனர். மாமியாரிடம் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை மருமகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News