ஆர்.கே.நகர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் குவியும் புகார்கள்!

தேர்தலுக்கான் பிரச்சாரம் அனல்பரக்க நிகழ்ந்து வருகின்றது. முதலவர் உள்பட முன்ணனி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Last Updated : Dec 16, 2017, 07:58 PM IST
ஆர்.கே.நகர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் குவியும் புகார்கள்! title=

பரபரப்பான சூழலில் வரும் 21-ம் நாள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் முன்னனி கட்சிகள் தங்கள் நட்சத்திர வேட்பாளர்களை களமிரக்கியுள்ளனர். இவர்களுடன் போட்டிப் போட சுயாட்சையாக பலரும் களத்தில் குதித்துள்ளனர், இதில் டி.டி.வி. தினகரன் அவர்களும் ஒருவர்.

தேர்தலுக்கான் பிரச்சாரம் அனல்பரக்க நிகழ்ந்து வருகின்றது. முதலவர் உள்பட முன்ணனி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே. நகரில் தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதி, தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ராவிடம் புகார் தெரிவித்துள்ளார். அதேப்போல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. கொறடா சக்கரபாணி புகார் மனுவை அளித்துள்ளார்.

Trending News