ராணிப்பேட்டை: மகன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை!

ராணிப்பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2022, 11:14 AM IST
  • குடும்பத்தகராறு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தற்கொலை
  • விரக்தியில் பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்
  • வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை
ராணிப்பேட்டை: மகன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை! title=

ராணிப்பேட்டை மாவட்டம் காரை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(62). இவர் அப்பகுதியில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி குணசுந்தரி(50). இவர்களுக்கு விக்னேஷ் மற்றும் ரமேஷ் (30) என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் விக்னேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் பாகாயம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரமேஷ் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் இதன் காரணமாக ரமேஷின் மனைவி காயத்ரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் சண்டையிட்டு அவர்களது சொந்த ஊரான கண்ணமங்கலத்திற்க்கு சென்றதாக தெரியவருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் குணசுந்தரி ஆகியோர் மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அதிர்ச்சியில் இவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | அன்பே வாழ்க்கை: தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல... கோழைத்தனம்

இதனை அறிந்த உறவினர்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் 

அதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சடலங்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது மேலும் சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு சம்பவம் குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 25 வயது பெண்ணை மணந்து வைரலான 45 வயது விவசாயி தற்கொலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News