மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உடன் ரஜினி திடீர் சந்திப்பு...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார்!

Last Updated : Feb 7, 2019, 10:46 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உடன் ரஜினி திடீர் சந்திப்பு... title=

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார்!

இன்று நடைப்பெற்ற இந்த சந்திப்பின் போது தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கியதாக தெரிகிறது.

வரும் 11-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ரஜினிகாந்த் சந்தித்து திருமண பத்திரக்கை வழங்கியுள்ளார்.

முன்னதாக நேற்று அண்ணாநகரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அதேப்போல் நடிகர் பிரபுவையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

Trending News