நவம்பர் 5 வரை தொடரும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Last Updated : Nov 1, 2017, 10:44 AM IST
நவம்பர் 5 வரை தொடரும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை title=

தமிழகத்தில் நவம்பர் 5-ம் தேதி வரை தொடர்ந்து மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை வரும் நவம்பர் 5-ம் தேதி வரை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஏற்கனவே கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல வீடுகளில் தண்ணீர் புகுத்துள்ளது. தண்ணீரை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீட்பு பணிகளை தமிழக அரசு தீவரப்படுத்தி உள்ளது.

 

Trending News