மீண்டும் தமிழகத்தை மிரட்டும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2018, 12:33 PM IST
மீண்டும் தமிழகத்தை மிரட்டும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!  title=

வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுவதாகவும், வருகிற 6 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் 4, 5, 6 ஆம் தேதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

Trending News