பிளஸ் டூ தேர்வு: 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தொடர்பாக 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 12:49 PM IST
  • சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது
  • பிளஸ் டூ தேர்வு தொடர்பாக 2 நாட்களில் முடிவு
  • மாணவர்களின் உடல்நலம், பாதுகாப்பு முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிளஸ் டூ தேர்வு: 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் title=

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இந்த தொற்றின் அபாயம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்வேறு மாநில அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்திலும் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. 

இதற்கிடையில் மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு (Plus 2 Exam) பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன்படி, பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ALSO READ | CBSE 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து

இந்நிலையில்  தமிழகத்தில் தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது., தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தொடர்பாக 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும். மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும். மாணவர்களின் உடல்நலம், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு (CBSE Board Exams 2021) பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி மாலை அறிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ்இ தலைவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில், இன்று மாலை  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் @ZeeHindustanTamil (https://www.facebook.com/ZeeHindustanTamil) மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil (https://twitter.com/ZHindustanTamil) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News