தகாத உறவு: 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்...!

தகாத உறவால் தனது இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!  

Last Updated : Sep 3, 2018, 01:53 PM IST
தகாத உறவு: 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்...!  title=

தகாத உறவால் தனது இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!  

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதல் விவகாரத்தில் அபிராமி என்பவர் தனது இரண்டு குழந்தைகளை கழுத்தை நெறித்து கொன்று விட்டு தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைமறைவான அவரை நேற்று நாகர்கோவிலில் வைத்து கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து விஜய் என்பவரை திருமணம் செய்தாலும், 2 மாதமாக பழகிய சுந்தரத்துடனான கள்ளக்காதலை விட முடியவில்லை என்றும், அதற்கு இடையூறாக இருந்த 2 குழந்தைகளும் இருந்ததால் அவர்களை கொன்றதாகவும் அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் கள்ளக்காதலன் சுந்தரம் கொடுத்த திட்டத்தின் படி கடந்த 30 ஆம் தேதி கணவர், குழந்தைகளுக்கு பாலில் விஷ மாத்திரை கலந்து கொடுத்ததாகவும், மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால், கணவர், மகன் ஆகியோர் பிழைத்துக் கொண்டதாகவும் கூறினார். 

மறுநாள் கணவர் வேலைக்கு சென்ற பிறகு மகன் அஜய்க்கு பாலில் மறுபடியும் பாலில் விஷம் கலந்து கொடுத்து, அவன் மயங்கிய பிறகு கழுத்தை நெறித்து கொன்றதாக கைதான அபிராமி போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இவரின் தகாத உறவால் ஒரு பாவமும் அறியாத இரண்டு குழந்தைகளை பலிகொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது....

 

Trending News