எதை செய்யக்கூடாதோ அதைதான் செய்கிறார்கள்... சிதம்பரம் கோவில் விவகாரத்தில் சேகர்பாபு காட்டம்!

இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 25, 2023, 08:53 PM IST
  • சிதம்பரம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - சேகர்பாபு
  • திராவிட மாடலை பொறுத்த அளவில் எம்மதமும் சம்மதம் - சேகர்பாபு
  • இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற வார்த்தையின் மூலம் நிலங்களை மீட்போம் - சேகர்பாபு
எதை செய்யக்கூடாதோ அதைதான் செய்கிறார்கள்... சிதம்பரம் கோவில் விவகாரத்தில் சேகர்பாபு காட்டம்! title=

மதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

திருப்பரங்குன்றம் ரோப் கார்

அப்போது, திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் குறித்த கேள்விக்கு, "2023ஆம் ஆண்டு வரை ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய பணிக்கு கால அளவு இருப்பதால் அது குறித்த பணிகளை நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரூ.12 கோடி செலவில் இரண்டு குடமுழுக்கு பணிகளுக்கு தற்போது, ஆறு கோடி ரூபாய் அளவிற்கு அனுமதிக்கு சென்றுள்ளது. எனவே குறித்த காலத்தில், குறித்த நேரத்தில் குடமுழுக்கு நடத்துவதற்கு உண்டான திருப்பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைப்பது குறித்த கேள்விக்கு, "இந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் இதுகுறித்து அறிவித்துள்ளோம். அதுகுறித்த சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக நிறுவனத்திடம் வழங்கி இருக்கிறோம். சாத்திய கூறு இருக்குமாயின் இந்த ஆண்டு அதற்கு உண்டான பணிகளை வேகப்படுத்தி பணிகளை தொடங்குகின்ற சூழ்நிலை உருவாக்குவோம்" என சேகர்பாபு பதிலளித்தார்.

இந்துகளுக்கு மட்டும் அனுமதியா...?

அர்ச்சகர்கள் லஞ்சம் கேட்பது குறித்த கேள்விக்கு, புகார்கள் வரப்பெற்றால் யார் அந்த தவறில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நிச்சயமாக துறை நடவடிக்கை எடுக்கும் என்றார், மேலும், பழனி கோவிலில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி என்று வைக்கப்பட்ட பலகை நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "இந்துக்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பதல்ல. இந்துக் கோவில்கள் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு வழிபடுவதற்கு, அவர்கள் சம்மதம் தெரிவித்தால், எந்த மதத்தினராக இருந்தாலும் திருக்கோவிலில் வழிபாடு மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காத காதலன் மீது சுடுநீர் ஊற்றிய காதலன்!

ஆகவே இந்து கோயில் என்பது இந்துக்களின் அடையாளம் அவர்கள் ஏற்றுக் கொண்டு வரும்பட்சத்தில் அதற்கு தடை ஏதுமில்லை. எனவே ஒரு சில மதத்தை சார்ந்து அடையாளத்தோடு வரும்போதுதான், இதுபோன்ற பிரச்சனைகள் எழுகின்றது. அங்கே வைக்கப்பட்டிருந்த பலகை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்வதால், இது பிரித்து பார்க்க வேண்டியதில்லை. திராவிட மாடலை பொறுத்த அளவில் எம்மதமும் சம்மதம், அனைவரும் ஒன்றிணைந்து அண்ணன், தம்பி போல் வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என பதிலளித்தார். 

சிதம்பரம் விவகாரம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு,"ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் கனக சபையின் மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படலாம், அது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையும் ஏற்கனவே பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஒரு ஆணை பிறப்பித்தது.

அப்படி இருக்கின்ற போது இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கிருக்க பணியாக இருக்கிறது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்கச் சொன்னதற்கு அவரிடம் தகராறு செய்துள்ளார்கள், சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து  உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்" என்றார்.

நில ஆக்கிரமிப்பு

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்கு,"இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 4000 ஏக்கருக்கு மேலாக இந்த சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல்வர் வழிகாட்டுதல்படி நிலங்களை மீட்டெடுத்து இருக்கிறோம். அப்படிப் புகார் வரப் பெற்றிருந்தால், வேறு எதுவும் நிலங்கள் அடையாளம் காட்டப்பட்டால் அதை மீட்டெடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. 

திருக்கோவில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாலும், இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற வார்த்தையை தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டு நிச்சயமாக அதை மீட்பதற்கு உண்டான நடவடிக்கையை துறை மேற்கொள்ளும்" என்றார், கோவில் நிலங்களை விற்பது குறித்த கேள்விக்கு,"நீதிமன்ற தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் அரசின் பயன்பாட்டிற்கு தேவை என்றால் வேறு இடங்கள் இல்லாத பட்சத்தில் அதை விற்கலாம் என்று தீர்ப்பு உள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது குறித்து விளக்கம் அளிப்பது ஏற்புடையதாக இருக்காது" என்றார்.

மேலும் படிக்க | மதுரையில் பரபரப்பு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்த திமுகவினர்..!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News