குடும்பம் நடத்த வராத மனைவியை கொலை செய்த கணவர் கைது!!

இந்துமதி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்லத்துரை இந்துமதியின் தலையில் அம்மிக்கலை தூக்கி போட்டு கொலை செய்தார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2021, 02:24 PM IST
குடும்பம் நடத்த வராத மனைவியை கொலை செய்த கணவர் கைது!! title=

குடும்பம் நடத்த வராத மனைவி மீது ஆத்திரப்பட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த செல்லத்துரை  என்பவரும், தம்பிக்கோட்டை கீழக்காடு முகவரியைச் சேர்ந்த இந்துமதி  என்பவரும், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

ஆகஸ்ட் மாதம்  இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார். இது தொடர்பாக செல்லத்துரை வழக்கு பதிவு செய்யவே, இந்துமதி பட்டுக்கோட்டை  நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்துமதியை செல்லதுரை தன்னுடன் அழைத்து வந்து வசித்து வந்துள்ளனர்.  

அதன் பின்பு கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு (Family Dispute) ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் கணவன் மனைவி இடையே பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்துமதி நாகை மாவட்டம் ஆய்மழை மேலத்தெருவை சேர்ந்த தனது சகோதரி  வீட்டிற்கு நேற்று காலை சென்று அங்கு தங்கியிருந்துள்ளார். 

ALSO READ | பெண் காவலரின் தொடர் கொலை மிரட்டல்: தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த நபர்

இந்நிலையில்  செல்லதுரை, நேற்று இரவு  ஆய்மழைக்கு வந்து தனது மனைவியுடன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து  இன்று காலை  இந்துமதியை தனது வீட்டிற்கு வருமாறு செல்லத்துரை அழைத்துள்ளார். 

இந்துமதி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்லத்துரை இந்துமதியின் தலையில் அம்மிக்கலை தூக்கி போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இந்துமதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த வேளாங்கன்னி போலீசார் (TN Police) வழக்குப்பதிவு செய்து செல்லத்துறையை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட இந்துமதியின் உடலை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கணவன் மனைவிக்கு இடையே இப்படிப்பட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போதுமான புரிதலும், அதிகப்படியான கோவமும், விட்டுக்கொடுக்காத மனப்போக்கும், தான் என்ற அகங்காரமும் அதிகமாவதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். 

ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News