ஆசிரியருக்கு ஒரு நீதி அரசியல்வாதிக்கு ஒரு நீதியா? :கமல்ஹாசன்

Last Updated : Sep 15, 2017, 11:34 AM IST
ஆசிரியருக்கு ஒரு நீதி அரசியல்வாதிக்கு ஒரு நீதியா? :கமல்ஹாசன் title=

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளைப் பற்றி தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றார். அந்த வகையினில் தற்போது ஊதிய உயர்வுக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்புகளுக்கு ஆதரவாக தனது கருத்தினைப் பதிந்துள்ளார.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-

 

 

"வேலை செய்யாத ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை எனில் வேலை செய்யாத எம்எல்ஏ -க்களுக்கு மட்டும் எதற்கு ஊதியம்" 

 

 

"மரியாதைக்குறிய நீதிமன்றம் வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்களை எச்சரிக்கின்றது. வேலை செய்வதில் இருந்து விலகி நிற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு இதேபோன்ற எச்சரிக்கைகளை வழங்கும்படி நீதிமன்றத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்".

என பதிவிட்டுள்ளார்.

Trending News