சென்னை வந்தார் பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

Last Updated : Sep 26, 2017, 12:19 PM IST
சென்னை வந்தார் பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்! title=

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் தமிழக பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுநர் சென்னை வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஜெயலலிதா மரணம் தொடா்பாக நீதி விசாரணை வேண்டும் என தமிழக அரசிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று விசாலணை கமிஷனுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும் இந்த விவகாரத்தினை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.

Trending News