கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு உறுதி: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் உறுதி அளித்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2022, 03:31 PM IST
  • கைது நடவடிக்கைக்கு கண்டனம்
  • அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சுவார்த்தை
  • போராட்டம் வாபஸ்
கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு உறுதி: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் title=

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் உறுதி அளித்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.3000ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு  ரூ.1500லிருந்து  ரூ.5000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சென்னையில் இன்று கோட்டையில் குடியேறும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி  இன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் எழிலகம் அருகே வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்திய 1500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையம், திருமண மண்டபம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இந்நிலையில் இந்தக் கைது நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.  

''மாற்றுத்திறனாளிகள் அவர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுவது அவர்களின் உரிமை. கடவுளின் குழந்தைகளான அவர்களைத் தடுப்பதும், தாக்குவதும் மன்னிக்க முடியாதவை.  மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Dubash: தமிழகத்தின் முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி! சட்டமன்ற சபாநாயகரின் உதவியாளர்

''கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா?'' என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் போராட்டம் நடத்திவந்த மாற்றுத்திறனாளிகளிடம் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்தார். 

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், முதல்வரிடம் உங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறினேன். தேர்தல் வாக்குறுதியிலேயே நாம் இதைக் கூறியுள்ளதால் படிப்படியாக இக்கோரிக்கையை நிறைவேற்றலாம் என்று என்னிடம் கூறினார். போராட்டம் நடத்தும் சங்கத்தினரிடமும் இதைத் தெரிவிக்குமாறு கூறினார். எனவே உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 

இந்த அறிவிப்பை வரவேற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நன்றி தெரிவித்து, போராட்டத்தை வாபஸ் பெற்றது. விரைவில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கட்ட விட மாட்டோம்.! - தமிழ்நாடு ; கட்டியே தீருவோம்! - கர்நாடகா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News